• 06 Mar, 2026

அச்சுறுத்தும் ரேபிஸ்

அச்சுறுத்தும் ரேபிஸ்

நாய் கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

 

நாய்கள், பூனைகள், மற்றும் சில காட்டு விலங்குகளால் கடிக்கப்படும் போது ரேபிஸ் என்ற உயிருக்கு ஆபத்தான வைரஸ் நோய் பரவக்கூடும். இது சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் மரணத்திற்கே வழிவகுக்கும்.

download (2)-2
 

ரேபிஸ் தொற்றின் முக்கிய அறிகுறிகள்:

  •        உடல் காய்ச்சல் 
  •        கடுமையான தலைவலி
  •        நீரைக் கண்டு பயம் (Hydrophobia)
  •        ஒலிக்குப் பயம் (Phonophobia)       
  •        வாயில் அதிக எச்சில்
  •        தசைகள் இறுக்கம், மூச்சுத் திணறல்
  •        பக்கவாதம், மனம் பிதற்றுதல்

இந்த நோயைத் தவிர்க்கவும், விரைவில் சிகிச்சை பெறவும் சில அவசியமான முன்னெச்சரிக்கைகள் உள்ளன

நாய் அல்லது பூனை கடித்தால் உடனடியாக செய்ய வேண்டியவை:

    காயத்தை ஓடும் நீரில் நன்கு கழுவுங்கள் – குறைந்தபட்சம் 10 நிமிடங்கள். 

    சோப்பு அல்லது போவிடின் அயோடின் (Betadine) போன்ற கிருமிநாசினியை பயன்படுத்துங்கள்.

  உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் சிகிச்சை பெறுங்கள்.

    காயத்தில் ரத்தம் வெளியேறினால், அது குறித்து மருத்துவரிடம் தெரிவிக்க மறக்க வேண்டாம்.

 

Rabies-Vaccination-Saves-Lives
 


 

Add 2

https://justnowcovai.com/ac-a217de2996c2c62490314b572070bc83ead84d8a/8TWGLM8AA2HM      

சில தவறான நம்பிக்கைகள் & உண்மைகள்:

தடுப்பூசி எடுத்தவுடன் அசைவம் சாப்பிடலாமா?
           ஆம். தடுப்பூசிக்கும் உணவுக்கும் தொடர்பில்லை. இது பழைய மூடநம்பிக்கை.

காயத்தை கையால் தொட வேண்டாமா?
            தவறாகக் கையாளல் வைரஸை பரப்பும். கைகளை பயன்படுத்தாமல், உடனடியாக கழுவ வேண்டும்.

மேலும் எச்சரிக்கை வேண்டிய நிலைகள்:

மலைப்பகுதிகள், காடுகள் போன்ற இடங்களில் காட்டு விலங்குகளால் கடிக்கப்படும் போது ரேபிஸ் தொற்று பரவும் அபாயம் அதிகம். எனவே பயணங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

முக்கிய ஆலோசனை:

விலங்குகளால் கடிபட்டாலோ, சின்ன காயம் ஏற்பட்டாலோ கூட மருத்துவ உதவி பெறுவதே பாதுகாப்பான வழி.