கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து, கோவை குற்றாலம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு காரணமாக தற்காலிக மூடல் அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சனிக்கிழமை வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .