• 18 Apr, 2026

இறந்ததாக நினைத்த முதியவர் உயிருடன்: பொள்ளாச்சி அருகே பரபரப்பு

இறந்ததாக நினைத்த முதியவர் உயிருடன்: பொள்ளாச்சி அருகே பரபரப்பு

பொள்ளாச்சி அருகே இறந்துவிட்டதாக நினைத்து இறுதிச் சடங்கிற்குத் தயாரான நிலையில், 63 வயது முதியவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 63 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் நினைத்துள்ளனர்.

 

Screenshot 2026-02-26 143411
 

 

இதையடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனால் குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.