• 19 Apr, 2026

மேம்பாலங்கள் இரவில் மூட நடவடிக்கை

மேம்பாலங்கள் இரவில் மூட நடவடிக்கை

விபத்துகளைத் தவிர்க்க, கோவையில் சில முக்கிய மேம்பாலங்கள் இரவு நேரங்களில் மூடப்படுகின்றன.

கோவையில் மேம்பாலங்களில் அதிவேகமாகச் செல்வதால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த, மாநகர காவல் துறையினர் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Screenshot 2026-02-26 153509
 

இதன்படி, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை நகரில் உள்ள சில முக்கிய மேம்பாலங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளன. இந்த நடவடிக்கை, இரவு நேரங்களில் அதிக வேகத்தில் வாகனங்கள் செலுத்துவதால் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், காவல் துறையினர் கண்காணிப்பையும் அதிகரித்து, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.