• 19 Apr, 2026

‘RTO அபராதம்’ பெயரில் சைபர் மோசடி – கும்பல் கைது

‘RTO அபராதம்’ பெயரில் சைபர் மோசடி – கும்பல் கைது

‘RTO அபராதம்’ என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வந்த சைபர் மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.

‘RTO அபராதம்’ என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த சைபர் மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல், வாகன உரிமையாளர்களுக்கு மொபைல் மெசேஜ் அல்லது வாட்ஸ்அப் மூலம் “உங்கள் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, உடனே பணம் செலுத்துங்கள்” என்று போலியான தகவலை அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. அந்த மெசேஜில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கை திறந்து பணம் செலுத்தும்போது, பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Screenshot 2026-02-26 145227
 

 

 

இதுகுறித்து பலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட சைபர் மோசடி கும்பலை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். மேலும், பொதுமக்கள் இதுபோன்ற சந்தேகமான மெசேஜ்கள் மற்றும் லிங்குகளை திறக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.