இனி ஏடிஎம்களில் இந்த நோட்டுகள் கட்டாயம் வைக்க வேண்டும்... ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பின் படி, அனைத்து வங்கிகளும் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் இயக்குநர்களும் (White Label ATM Operators - WLAOs) தங்களின் ஏடிஎம்களில் ₹100 மற்றும் ₹200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயமாக வழங்க வேண்டும். இந்த நடவடிக்கை, பொதுமக்களுக்கு சிறிய மதிப்புள்ள நோட்டுகளை எளிதாகக் கிடைக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது