• 18 Apr, 2026

அரசுப் பள்ளி சேர்க்கைக்கு வெள்ளி நாணயம் – புதிய விழிப்புணர்வு முயற்சி

அரசுப் பள்ளி சேர்க்கைக்கு வெள்ளி நாணயம் – புதிய விழிப்புணர்வு முயற்சி

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசுப் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்க பள்ளி நிர்வாகம் அறிவிப்பு.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் புதிய விழிப்புணர்வு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பள்ளியில் புதியதாக சேரும் மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Screenshot 2026-02-26 160509
 

 

 

 இந்த முயற்சி பெற்றோர்களை அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி, இலவச புத்தகங்கள், மதிய உணவு போன்ற பல நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.