• 16 Apr, 2026

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் – அரசு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்: வானதி சீனிவாசன்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் – அரசு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்: வானதி சீனிவாசன்

ஆன்மீக சக்தியை யாராலும் தடுக்க முடியாது என்றும், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் அரசு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் , திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், ஆன்மீக சக்தியை யாராலும் தடுக்க முடியாது என்றும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

Screenshot 2026-02-26 145227
 

மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். சட்டம் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளை மதிப்பது அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.