• 19 Apr, 2026

நீர்வரத்து அதிகரிப்பால் ஆக்ரோஷமாக காணப்படும் கோவை குற்றாலம் சனிக்கிழமை வரை மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கனமழை தொடரும்!

நீர்வரத்து அதிகரிப்பால் ஆக்ரோஷமாக காணப்படும் கோவை குற்றாலம்  சனிக்கிழமை வரை மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கனமழை தொடரும்!

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து, கோவை குற்றாலம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு காரணமாக தற்காலிக மூடல் அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சனிக்கிழமை வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

கோவையில் பெய்த கனமழையால் நகர சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன . வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள், பெரும்பாடு அனுபவிக்கின்றனர் . மேலும், நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது .கோவையில் உள்ள சர்வதேச விமான நிலைய சேவைகள் வழக்கம்போல் இயங்குகின்றன . எனினும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.மேலும், நாளை (28-05-2025) பராமரிப்பு பணிகளுக்காக கோவை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் .