சரவணம்பட்டி, சிங்கநல்லூரில் புதிய மேம்பாலங்கள் – போக்குவரத்து நெரிசல் குறைய நடவடிக்கை
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சரவணம்பட்டி மற்றும் சிங்கநல்லூர் பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சரவணம்பட்டி மற்றும் சிங்கநல்லூர் பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மேலும் சில கல்லூரிகளுக்கு தன்னாட்சி (Autonomous) அந்தஸ்து வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் முழுமையான சோதனைக்குப் பின் வதந்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று அதிகபட்ச வெப்பநிலை 36°C வரை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம்க்கு உட்பட்ட உடுமலைப்பேட்டை வனச்சரகத்தில் காட்டு யானை தாக்கியதில் 4 வயது சிறுவன் தருண் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Star Health and Allied Insurance நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட திண்டுக்கல் கிளை அலுவலகத்தை ஆர். சச்சிதானந்தம் எம்.பி. திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் மருத்துவக் காப்பீட்டு சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மத்திய பேருந்து நிலையம் அருகே இந்த புதிய கிளை செயல்படத் தொடங்கியுள்ளது.
சிறுதுளி அமைப்பு சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் 20 ஏக்கர் நிலத்தில் 17,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, பசுமை வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை (கேஎம்சிஹெச்) சார்பில் கல்லீரல், கணையம் மற்றும் இரைப்பை குடல் நோய்களுக்கான ஊட்டச்சத்து குறித்த ஒரு நாள் சர்வதேச மாநாடான லிவர் நியூட்ரிகான் 2026 கோவையில் நடைபெற்றது. இதில் “கேஎம்சிஹெச் லிவர் டயட்” என்ற புதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, கல்லீரல் நோயாளிகளுக்கான அறிவியல் அடிப்படையிலான ஊட்டச்சத்து சிகிச்சையின் முக்கியத்துவம் விவாதிக்கப்பட்டது.
மின்சார வாகனங்களுக்கு அதிகரிக்கும் வரவேற்பைத் தொடர்ந்து, ராஜதுரை இ-மொபைலிங் நிறுவனம் சார்பில் கோவை சத்தி சாலையில் River மின்சார இருசக்கர வாகன விற்பனையகம் தொடங்கப்பட்டது; திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன
நகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் 100 மாநகராட்சி பூங்காக்களில் ‘மியாவாக்கி’ காடுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மற்றும் ராமேஸ்வரம் இடையேயான நேரடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோல் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.